செவ்வாய், 12 ஜூன், 2012

தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்


வாழ்க்கையில் பல்வேறு வகையான தான தருமங்களை செய்து வாழவேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு தகுந்தாற்போல் அதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சில தானங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
வஸ்திரதானம் – ஆயுள் விருத்தி.
பூமி தானம் – பிரம்மலோகத்தை தரும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம்.
நெல்லிக்காய் தானம் – ஞானம்.
அரிசி தானம் – பயம் போக்கும்.
விதை வித்துகள் தானம் – ஆயுள், சந்ததி விருத்தி.
தாம்பூல தானம் – சொர்க்கத்தை தரும்.
அன்னதானம் – நினைத்தது கிடைக்கும்.

நன்றி :  http://senthilvayal.wordpress.com

திங்கள், 11 ஜூன், 2012

கோமத்யம்பாஷ்டகம் - II


 ஸ்ரீ குருப்யோ நம :

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதரின் சிஷ்யரான 
ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள் 
இயற்றிய 

கோமத்யம்பாஷ்டகம் 

முகுரஸமகபோலே பக்தசித்தானுகூலே 
வின்மதமாஜாலே விஷ்டபாராதிகாலே !
விரசிதசிவலீலே வல்லகீநாதலோலே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (1)

புவனஜனனி மாயே பார்வதீநாமதேயே 
த்ருதஸுகுணநிகாயே திவ்யஸௌந்தாயகாயே ! 
ஸகலவிபுதகேய மன்மனோபாகதேயே 
ஹிமகிரிவரபாலே  கோமதி த்ராஹிபாலே !! (2) 

கதன ஹரகடாக்ஷே லோகரக்ஷாவிதக்ஷே 
கலிதவிநதரக்ஷே  கல்பிதாராதிசிக்ஷே ! 
ப்ரமுதிதவீ க்ஷமாக்ஷே பக்த ஸந்தத்தமோக்ஷே
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (3)

ஸகலநிகமருபே ஹஸ்தவின்யஸ்தசாபே 
ப்ரமதிதபவதாபே சுத்ததத்வஸ்ரூபே !
மதிதஸகலபாபே தைத்யவின்யஸ்தகோபே 
ஹிமகிரி வரபாலே கோமதி த்ராஹிபாலே !! (4)

மரகதமணிஹாரே ஸல்லஸத்சே சபாரே
சமிததநுகுமாரே  யுத்தஸன்னாஹதீரே !
துரிததருகுடாரே துஷ்டஸந்தோஹகோரே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (5)

ப்ருதுலதரநிதம்பே பாஸமானோஷ்டபிம்பே 
சரிதருசிரகதம்பே சந்தரதுல்யாஸ்யபிம்பே !
ஸுசரிதநிகுரும்பே சூலவித்வஸ்தசும்பே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (6)

சுகசிசுகலபாஷே சோபிமுக்தாவிபூஷே
விரசிதரிபுரோஷே பத்ரகாள்யாதிவேஷே !
சசதரதரயோஷே மத்ஸ்யபக்வாபிலாஷே 
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (7)

நிகிலபயகபூத ப்ரேதபைசாசஜாதா: 
ஜ்வரபயவிஷவாத க்ருரயுத்ஸன்னிபாதா !
அதிசமனஸமேதா யத்கடாக்ஷாத்ப்ரபீதா :
ஹிமகிரிவரபாலே கோமதி த்ராஹிபாலே !! (8)

- சுபம்- 









ஞாயிறு, 10 ஜூன், 2012

தேன் துளி



                                                             

"ரு காரியம் கடினமாக இருக்கிறது என்பதற்காக அதை விட்டுவிடக் கூடாது. மாறாக , அது கடினமாக இருப்பதற்குத் தக்க , நாம் அதிக உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற வேண்டும். "
                                                                                                        -  ஸ்ரீ அரவிந்த அன்னை 

வியாழன், 7 ஜூன், 2012

ஸ்ரீ கோமதி அஷ்டகம்


ஸ்ரீ குருப்யோ நம  :
(ஸ்ரீ ஆதி சங்கரபகவத்பாதாள் இயற்றியது)
சங்கரநயினார் கோவில் ஸ்தல மஹாத்மியம்

பூகைலாசே மனோக்யே புவன வ்ருதே
நாக தீர்த்தோப கண்டே ரத்னபராஹாரமத்யே 
ரவிசதுர்ச மஹாயோகபீடே நிஷண்ணம்
ஸம்ஸார   வ்யாதி வைதயம் சகலஜனனுதம்
 சங்க பத்மார்ச்சிதாங்க்ரீம் 
கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம் 
ஸ்ரீ சங்கரேசம் நமாமி 

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அருளியது 
ஸ்ரீ கோமதி அஷ்டகம் 

லக்ஷ்மீவாணீ  நிஷேவிதாம் புஜபதாம் 
லாவண்ய சோபாம், சிவாம் 
லக்ஷ்மீ வல்லப பத்மஸம்பவநுதாம் 
லம்போத ரோல்லாஸினீம் 
நித்யம் கெளசிக வந்த்ய மானசரணாம்  
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம் 
ஸ்ரீ புன்னாக வநேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா  கோமதி (1)

தேவீம் தாநவராஜ தர்பஹரிணீம் 
தேவேந்த்ர ஸம்பத் ப்ரதாம் 
கந்தர்வோரக யஷ ஸேவிதபதாம்
ஸ்ரீ சைல மத்யஸ்திதாம்
ஜாதீ சம்பக மல்லிகாதி குஸுமை
ஸம்சோபிதாங்கிரி  த்வாயாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (2)

உத்யத்கொடி விகர்த்தனத்யுதி நிபாம் 
ஔர்வீம்   பவாம்  போநிதே 
உத்யத் தாரக நாத்துல்ய வதனாம் 
உத்யோதயந்தீம் ஜகத் 
ஹஸ்தர்யஸ்த சுகப்ரணாள ஸஹிதாம் 
ஹர்ஷப்ரதாம் அம்பிகாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (3)

கல்யாணீம் கமணீ யமூர்த்தி சகிதாம் 
கர்ப்பூர தீயோஜ்வலாம் 
கர்ணாந்தாயத லோசனாம் களரவாம்
காமேஸ்வரீம் சங்கரீம் 
கஸ்தூரீ திலகோஜ்வலாம் சகருணாம்
கைவல்ய ஸௌக்யப்ரதாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (4)

வைடூர்யாதித ஸமஸ்ரத்ன கசிதே 
கல்யாண ஸிம்ஹாஸனே  
ஸ்தித்வா சேஷஜனஸ்ய பாலனகரீம் 
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீம்
பத்தாபீஷ்ட பலப்ரதாம் பயஹராம் 
பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (5)

சைலாதீச ஸுதாம் ஸரோஜ நயநாம்
ஸர்வாக வித்வம்ஸினீம்  
ஸன்மார்க்க ஸ்திதலோகரக்ஷ ஜனனீம் 
ஸர்வேச்வரீம்  சாம்பவீம் 
நித்யம் நாரத தும்புருப்ரப்ருதிபி 
வீணா விநோதஸ்திதாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (6)

பாபாரண்ய தவானவாம் ப்ரபஜதாம் 
பாக்யப்ரதாம் பக்திதாம் 
பக்தாபத்குலசைல போதன பவிம்
ப்ரத்யஷ  மூர்த்திம் பராம் 
மார்க்கண்டேய பராசராதி முனியி 
ஸம்ஸ் தூயமானாமுமாம் 
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (7)

சோராரண்யா நிவாஸினாம்  ப்ரதிதினம் 
ஸ்தோத்ரேண  பூர்ணாந நாம்
த்வத்பாதாம் புஜஸக்த பூர்ணமனஸாம் 
ஸ்தோகேத ரேஷ்ட ப்ரதாம் 
நாநா வாத்யவைச்ச சோபிதபதாம் 
நாராயணஸ்யானுஜாம்  
ஸ்ரீ புன்னாக வனேச்வரஸ்ய  மஹிஷீம் 
த்யாயேத் ஸதா கோமதி (8)



- சுபம்- 






ஞாயிறு, 3 ஜூன், 2012

காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்யரின் வாக்கும் வாழ்க்கையும்





நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகளின் , அவதார நன்னாள் நாளை , வைகாசி மாதம் அனுஷ நட்ச்சத்திரத்தன்று வருகிறது. தமது நோக்காலும், வாக்காலும், வாழ்க்கை முறையாலும் அவர் உபதேசித்த விஷயங்கள் " தெய்வத்தின் குரலாக " வெளிவந்துள்ளது. 

"ஊருக்குத்தான் உபதேசம்" என்று இல்லாமல் , தமது உபதேசத்திற்கேற்றவாறு தமது வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார்கள் பெரியவா. "தெய்வத்தின் குரல் " முதலாம் பாகத்தில் "எளிய வாழ்வு" எனும் தலைப்பில், மகாஸ்வாமிகள் கூறிய அறிவுரயினையும் , அதனை எப்படி தமது வாழ்விலே கடைப்பிடித்துக் காட்டினார்கள் என்பதனை உணர்த்தும் புகைப் படத்தினையும் காணும் போது நமது மனம் நெகிழ்கிறது. 

தெய்வத்தின் குரல் - எளிய வாழ்வு 



"வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, என்ற வார்த்தை இப்போது ரொம்பவும் அடிபடுகிறது. சர்க்கார் திட்டங்கள் இதற்குத்தான் என்கிறார்கள். எல்லோருக்கும் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான வஸ்திரம், வசிப்பதற்கு ஒரு சின்ன ஜாகை இருக்க வேண்டியதுதான். இதற்கே சர்க்கார் திட்டம் போட வேண்டும். இதற்கு அதிகமாகப் பொருளைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. 

உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். தேவைகளை அதிகமாக்கிக்கொண்டு அவற்றுக்காக ஆலாப் பறப்பதால் நிறைவு ஒருவருக்கும் கிடைக்காது. இதைப் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறோம்.

 நாம் மேலைநாட்டுக் காரர்கள் மாதிரி, போக போக்கியங்களுக்கு பறக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டுக்காரர்களோ அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கூட நாம் புத்தி பெறவில்லை என்றால், அதுதான் துரதிருஷ்டம்.

ஒருத்தன் பீரோ நிறைய துணி வைத்திருந்தாலோ, கண்ட நேரத்தில் ஹோட்டலுக்குப் போய் கண்டதைத் தின்பதால, வீட்டை ஏர் கன்டிஷன் செய்து கொண்டு விட்டதாலோ அவனுடைய வாழ்க்கை தரமாகி விடாது. மனம் நிறைந்திருந்தால் அதுவே வாழ்க்கைத் தர உயர்வாகும்."

 நன்றி : தெய்வத்தின் குரல் , http://mahaperiyavaa.wordpress.com

வெள்ளி, 1 ஜூன், 2012

தேன் துளி





இறைஅநுபூதி 

சாதகர் :


"இறைஅநுபூதி அடைதல் " என்பதன் உண்மையான பொருள் என்ன ? 

ஸ்ரீ அன்னை :

தன் பொருள்...

உன்னுள் அல்லது உனது ஆன்மிகச் சிகரங்களில் இறைவனது ஸாநித்தியத்தை உணர்தல் ,

அவனுடைய ஸாநித்தியத்தை உணர்ந்ததும் அவனுக்கு உன்னை முற்றிலுமாகச் சரணாகதி செய்தல், 

அதன் மூலம் அவனுடைய சித்தத்தைத் தவிர உனக்கென தனி இச்சை இல்லாத நிலை பெறுதல்,

இறுதியில் உனது உணர்வை அவனுடைய உணர்வுடன் ஐக்கியமடையச் செய்தல். அதுவே இறைஅநுபூதி ஆகும். 

( நன்றி : வைகறை - ஸ்ரீ அரவிந்த ஆசிரம தமிழ் காலாண்டு )

அபூர்வமான மகாலட்சுமி ஸ்தோத்திரம்


இது பழையக் கால புத்தகம் ஒன்றினில் ( புத்தகத்தின் பெயர் : தர்ம வர்த்தனீ ) , "ஸ்ரீ திரிபுரா ரஹஸயம்"  என்ற கதையில் , கிளை கதையாக வரும் ஒரு சுலோகம் . இதனை ஸ்ரீ ரங்கத்தைச் சார்ந்த எஸ். ஜானகி என்பவர் ஒரு ஆன்மிக புத்தகத்திலே வெளியிட்டு இருந்தார். அவருக்கு நன்றி .

தேவர்கள் ஸ்ரீயாகிய மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தனை செய்த சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை வெள்ளிகிழமைகளில் சொல்லி பூஜை செய்பவர்களுக்கு , ஒப்பற்ற செல்வம் உண்டாகும் என்று தேவர்களிடம் ஸ்ரீ தேவி கூறி அருளினாள்.

1 நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை பத்மாயை ஸததம் நம /
   நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம //

2 த்வம் ஸாக்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா /
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ //

3 பரமானந்ததா அபாங்கி ஹ்ருத சம்ஸ்ருத்த துர்கதி : /
  அருணா நந்தினீ  லக்ஷ்மீ :  மஹாலக்ஷ்மீ : திரிசக்திகா //

4  ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா /
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி : //

5 . ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி /
ரமா ரக்ஷ்க்ஷாகரீ   ரம்யா ரமணீ மண்டலோத்தமா //


( இந்த ஸ்லோகத்தில் ஏதாவது பிழை இருந்தால் , தயவு செய்து தெரிவிக்கவும் )

உங்களோடு சில வார்த்தைகள் ....


"பக்தி யுகத்தி"ற்கு வருகை தரும் அனைவரையும் அன்போடு வணங்குகிறேன் .

இன்றைய அறிவியலின் புரட்சியால் நாளும் புதிய கண்டுபிடிப்புகளும் , காலத்தைக் கடக்கும் வேகமும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தின் அதி வேகத்தாலும், வளர்ச்சியாலும் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாகி உள்ளது.

இன்டர்நெட்டில் , நாம் பெற முடியாத தகவல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். கடுகு முதல் கடவுள் வரை நாம் எதை குறித்துத் தேடினாலும் , நமக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

குறிப்பாக ஆன்மிக தகவல் தளங்களும், ப்ளாக் - களும் நாளும் பெருகி வருகின்றன. இவை எல்லாமே உண்மையில் ஆன்மிகத்தினை வளர்ப்பதற்க்காகத்தான் செயல் படுகின்றனவா என்பது கேள்வி குறியே !

சில தளங்கள் சிறப்பாகவும் , நேர்மையான தகவல்களுடனும் ஆன்மிகக் கருத்துக்களை வெளியிடுகின்றன. ஆனால் , தங்களது தளத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகைத் தர வேண்டும் எனும் குறிக்கோளை மட்டுமேக் கொண்டு , சில தளங்கள் ஆன்மிகக் கவர்ச்சியினை மேற்கொண்டு வருகின்றன. அவை எவை என்பது நமக்கு இங்கே தேவை இல்லை.

புதிய புதிய மந்திரங்களையும், வழிபாட்டு முறைகளையும் வெளியிடுவதும் , இன்று இணையத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்படும் "சித்தர்கள்" எனும் சொல்லை மையப்படுத்தியும் , மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு  தீர்வு கூறுவது போல பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றன.

ஆனால் அவர்கள் வெளியிடும் , அனைத்து "மந்திர-தந்திர" முறைகளுக்கு , எது ஆதாரமாக விளங்குகிறது என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அந்நாட்களில் மந்திரங்கள் மறைபொருளாக வைக்கப் பட்டதன் நோக்கம் , அது சரியான முறையிலே , சரியான நபரிடம் சென்று அடைய வேண்டும் என்பதற்காகவே.

ஒரு குரு , தன்னிடம் உள்ள எல்லா சீடர்களுக்கும் , ஒரே மாதிரியான மந்திரத்தை அளிப்பது இல்லை. மாறாக ஒவ்வொருவரின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ற , மந்திரங்களையே உபதேசிப்பார். அதையும் கூட ரகசியமாக அந்த குருவும் சீடரும் மட்டுமே அறியும்படி செய்வார்.

மந்திர பிரயோகங்களில் , ஒரு அக்ஷரம் மாறினாலும்,அல்லது ஒலி அமைப்பு மாறினாலும் , அல்லது அதனை ஜபிக்கும் முறைகளில் சிறு பிசகு ஏற்ப்பட்டாலும் கூட அதன் விளைவுகள் விபரீதமாக மாறிவிடக்  கூடவாய்ப்பு உள்ளது.

இன்று பல்வேறு , தளங்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல் படுகின்றனவா என்பது தெரியவில்லை.  சில மந்திரங்கள் எளிமையாக , அனைவரும் இயல்பாக ஜெபிக்கும்படி அமைத்துள்ளன.

 உதாரணமாக " ஓம் சிவ சிவ ஓம் " என்பதனைச் சொல்லலாம்.  அதையுமே ஜபிக்கும் போது எந்த நியமங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்பதனை அவர்கள் தெளிவாகக் "ஆன்மிகக் கடல் " தளத்தில் கூறியுள்ளார்கள்.

நம்முடைய நோக்கம் , யாரையும் தாக்குவது இல்லை. பார்வையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதே. 

இன்று ஆன்மிகம் என்பது கடைச் சரக்காகி விட்டது.  புற்றீசல் ஜோதிடர்களும் , கார்பரேட் சாமியார்களும் எதோ புதியதாக தாங்கள்தான் ஆன்மிக ரகசியங்களை வெளியிடுவதாகவும் , உலக மொத்த துன்பங்களை எல்லாம் தங்களால் தீர்த்து விட முடியும் என்பதாகவும் , தங்களை பிரபல்யப் படுத்திக் கொள்கின்றனர். ஆனால் நாம் "நிறை குடம் தளும்பாது " என்பதனை என்றும் மறந்து விடக் கூடாது.

குருவே சரணம் !

நன்றி!

பணிவுடன்
"பக்தியுகம்" கிருஷ்ணா

சுபிக்ஷ தின வாழ்த்துக்கள் JUNE - 1- 2012






" புதிய ஒளி புவி மீது பரவி
   மனித வாழ்க்கையின் நிலைமையை
   மாற்றிடுமாக "
                                                     
                                                                                      - ஸ்ரீ அன்னை