ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி

விருதுநகர் மாவட்டம் , திருச்சுழியில் அமைந்துள்ளது அருள்மிகு பூமிநாத  சுவாமி திருக்கோவில் . இந்த கோவிலைச் சுற்றி உள்ள 8  கிராமங்களில்  இறைவன் அஷ்ட லிங்க அமைப்பினில் அமைந்துள்ளார்.

அவற்றில்  ஒருவர்தாம் பாறைகுளம்  எனும் ஊரினில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி . சிறிய குன்றினில் குடைவரைக் கோவிலாக  அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய  ஸந்நிதி.  சிறிய நந்தி தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . பரிவார தேவதைகளும்  புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.சில மரங்கள் நிழல் தருகின்றன. புதிய மரங்களும் நடப் பட்டு வருகின்றன.

ஆள் அரவம் இல்லா , இடத்தினில் ஏகாந்தமாக  இறைவன் அமர்ந்துள்ளார். பிரதோஷம், அமாவாசை , பௌர்ணமி நாட்களில் மக்கள் இங்கு கூடி வழிபாடு செய்கிறார்கள்.அமாவசை நாட்களில் அன்னதானமும் நடைபெறுகின்றது..

தினசரி பூஜைகளும் எளிமையாக நிகழ்கின்றன.தொடர்புக்கு : திரு.முத்துராமலிங்கம் :+91 8883537031. முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு செல்வது சிறந்தது.









குடைவரை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.




ஆலய மணி

 பாறைகுளம் ஸ்ரீ வெள்ளியம்பலநாத சுவாமி


இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி. (மேலே)






இறைவன் மீது சூரிய ஒளி  , விழும் காட்சி.