செவ்வாய், 29 ஜனவரி, 2013

நித்திய பூஜை இன்றி காத்திருக்கும் v .நாங்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்










மதுரை  அருகே உள்ள காரியாப்பட்டி என்ற ஊரில்  இருந்து சுமார் 10 k .m . தொலைவில் அமைந்துள்ள் சிறிய கிராமம்தான் v . நாங்கூர் . இதன் முழு பெயர் வைரவன் நாங்கூர். ஸ்ரீ கால பைரவர் தனி ஸந்நிதி  கொண்டு கிழக்கு நோக்கி 6 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அற்புதமான ஸ்தலமாகும், இந்த பைரவரின் பெயரில்தான் இவ்வூர் வைரவன் நாங்கூர் என அழைக்கப்படுகிறது.

இதே ஊரில் , அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நாராயண சுவாமி சந்நிதி. ஆலயம் என்ற ஒன்று இருந்தது என நம்புவதே கஷ்டமாக இருக்கும் விதத்தில், கருவறை பீடம் மட்டுமே தற்போதுக்  காணப்படுகிறது.

தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தியவாறு , சங்கு - சக்கரம் தரித்து கிழக்கு நோக்கி வெட்ட வெளியில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள்.

அருகிலேயே ஸ்ரீ இராமானுஜர் மற்றைய ஆழ்வார்கள் சிலைகள் பின்னப்பட்டுக் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தினை பராமரித்து வந்த பூர்விக மக்கள் தற்போது இடம்பெயன்றுச் சென்றுவிட்டனர்.

கடந்த 19-01-2013 அன்று பக்தர்கள் ஒன்றிணைந்து , வெகு வருடங்களுக்குப் பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து,  அதி விரைவில் இவ்வாலயம் முழுமையாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்று பெருமாளுக்கு நித்திய  பூஜைகள் நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.

தற்காலிகமாக  ஆஷ்பெட்டாஷ்  கூரை ஒன்றை அமைக்க அவ்வூர் பஞ்சாயத்து தலைவர்  முயற்சி செய்து வருகிறார். இந்த இறை பணியில் ஈடுபட விரும்புபவர்கள்  "பக்தி யுகத்தையோ" அல்லது , நேரடியாக அவ்வூருக்குச் சென்றோ தங்களால் இயன்ற  உதவிகளைச் செய்யலாம். 

v .நாங்கூர் - ஸ்ரீ பைரவர்.




மதுரை - காரியப்பட்டி  அருகில் உள்ள v .நாங்கூர் - ல் அமைந்துள்ள 6 அடி உயரமுள்ள தனி சன்னதியோடு கிழக்கு நோக்கி அருள் புரியும் ஸ்ரீ பைரவர். 

வெள்ளி, 4 ஜனவரி, 2013

வைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ கால பைரவர்



அருப்புகோட்டை அருகே உள்ள ஊர்  காரியப்பட்டி. இதன் அருகே அமைந்துள்ள சிற்றூர்தான் V நாங்கூர் எனப்படும் வைரவன்  நாங்கூர்.இங்குள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கால பைரவர் ஆலயம். ஆறடி உயரம் உள்ள ஸ்ரீ காலபைரவர் கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இது பைரவருக்கான தனி ஆலயம் என்பது இதன் சிறப்பு ஆகும் . சுற்றிலும் பரிவார தேவதைகள் இருக்கிறார்கள்.

ஆதியில் இங்குள்ள குளத்தில் இந்த சிலை புதையுண்டு மறைந்து இருந்து இருக்கிறது.அவ்வூரில் வாசித்த ஒரு அந்தணரின் கனவில் தான் மருந்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளார்  ஸ்ரீ கால பைரவர்.குறிப்பிட்ட நான்கு சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் அந்த இடத்திற்க்குச் சென்று , பைரவரை எடுத்து இந்த குளத்தின் கரையிலே பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வந்துள்ளனர் . 

பிற்காலத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்று உள்ளது. 

தற்போது ஒருகால பூஜையும் தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தின் படங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பூசாரி தொடர்புக்கு : திரு.ரத்தினம் பூசாரி : +91 9786617880.
காரியாப்பட்டியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் டவுன் பஸ் உள்ளது.