செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

800 ஆண்டுகள் பழமையான ராஜபாளையம் -சோழபுரம் - ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம்

ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் 


சோழபுரம் சிவாலய தோற்றம் (கீழே)



விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்துள்ள ஊர் சோழபுரம் ஆகும்.இங்கு முக்கிய சாலையின் மேல் புறம் அமைந்துள்ள சிவாலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள அம்பாள் சன்னதியின் அருகில் ஈசான்ய பாகத்திலே ஒரு லிங்கம் அமைந்தள்ளது. இதனை ஸ்ரீ துளஸி சித்தர் ஒடுக்கம் எனக் கூறுகின்றனர். இவர் இங்கு ஐக்கியம் ஆகி 800 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது எனக் கூறுகின்றனர். 

வாழ்வாங்கி ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி





விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி to அருப்புகோட்டை சாலையில் உள்ள ஊர் வாழ்வாங்கி ஆகும். நான்கு வழி சாலையின் மேல்புறம் , பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீ ஆதிலிங்க சுவாமி ஜீவ சமாதி.
தற்போது பௌர்ணமி அன்று மாலை  சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு :
திரு.மணிகண்டன் : +91 9786397825
திரு.கமலேஷ் : +91 9677863132

திங்கள், 18 பிப்ரவரி, 2013

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

ஸ்ரீ லோபாமுத்திரை தாயாருடன் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியிலும் , அதனை அடுத்து அமபாசமுத்திரத்திலும் அமைந்துள்ளது.


கருவறையில் மூலவராக ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கி நின்ற திருகோலத்திலும் , தாயார் ஸ்ரீ லோபமுத்ரா தேவி தெற்கு நோக்கி தனி சந்நிதியிலும் அருள் மழை பொழிகிறார்கள் .

சித்தர் வழிபாடு செய்யும் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில்கள். நெல்லையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.