ஞாயிறு, 4 டிசம்பர், 2011

ஸ்ரீ அரவிந்த அஞ்சலி

இன்று ஸ்ரீ அரவிந்தர் குரு சமாதி தினம் 

பூரண யோகம் தந்த பூரணனே !
பொன்னடி பணிகின்றேன் -
 புதுயுக காரணனே !

அஞ்சலிகள் ஆயிரம் செய்தாலும் தகுமோ
 தம்  அவதார காரணத்திற்கு.     
ஒவ்வொரு கணத்தினில் நன்றிகள்
நவின்றாலும் போதுமோ .

யுகத்தின் மாற்றத்திற்காய்
உவந்தளித்தாய் தேகத்தை !
விளம்பிடவும் அரிதாமோ
 தாம் செய்த தியாகத்தை !

 நன்றி ! எனும் வார்த்தையைத் தவிர
 வேறு ஏதும் அறியா எளியவனின்
 அஞ்சலியை
 தம் அவதார நிறைவு நாளில்
தம் தாளிலே அர்ப்பணிக்கின்றேன் .


 சரணம் ஸ்ரீ அரவிந்த குருநாதா!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக