வெள்ளி, 4 ஜனவரி, 2013

வைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ கால பைரவர்



அருப்புகோட்டை அருகே உள்ள ஊர்  காரியப்பட்டி. இதன் அருகே அமைந்துள்ள சிற்றூர்தான் V நாங்கூர் எனப்படும் வைரவன்  நாங்கூர்.இங்குள்ள குளத்தின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கால பைரவர் ஆலயம். ஆறடி உயரம் உள்ள ஸ்ரீ காலபைரவர் கிழக்கு நோக்கி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இது பைரவருக்கான தனி ஆலயம் என்பது இதன் சிறப்பு ஆகும் . சுற்றிலும் பரிவார தேவதைகள் இருக்கிறார்கள்.

ஆதியில் இங்குள்ள குளத்தில் இந்த சிலை புதையுண்டு மறைந்து இருந்து இருக்கிறது.அவ்வூரில் வாசித்த ஒரு அந்தணரின் கனவில் தான் மருந்துள்ள விவரத்தை தெரிவித்துள்ளார்  ஸ்ரீ கால பைரவர்.குறிப்பிட்ட நான்கு சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் அந்த இடத்திற்க்குச் சென்று , பைரவரை எடுத்து இந்த குளத்தின் கரையிலே பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வந்துள்ளனர் . 

பிற்காலத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற்று உள்ளது. 

தற்போது ஒருகால பூஜையும் தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தின் படங்கள் விரைவில் வெளியிடப்படும்.

பூசாரி தொடர்புக்கு : திரு.ரத்தினம் பூசாரி : +91 9786617880.
காரியாப்பட்டியில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் டவுன் பஸ் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக