செவ்வாய், 13 மார்ச், 2012

உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் .....

இன்று மாசி மாதமும் பங்குனி மாதமும் சந்திக்கும் புண்ணிய வேளையிலே ,கடைப் பிடிக்கப் படும் விரதம் தான் " காரடையான் நோன்பு " என்று அறியப்படும் சாவித்ரி விரதம் .


(சாவித்திரி தேவி )


சத்தியவான் சாவித்திரி கதை , மகாபாரதத்தின் கிளை கதைகளில் ஒன்றாக வருகிறது.தெய்வீக காதலால் இணைந்த காதலர்களான "சத்யவான் - சாவித்திரி " இருவரின் அன்பை மையமாகக் கொண்டு  , அந்த அன்பால் , தனது கணவனின் விதியையே சாவித்திரி எவ்வாறு மாற்றினாள் என்பதனை சாவித்ரியினுடைய காவியம் கூறுகிறது.


கார் காலத்திலே விளைந்து வரக்கூடிய புதிய நெல்லினை குத்தி அதனில் இருந்து அடை தயாரித்து , அதனை தேவிக்கு அர்ப்பணித்து , சுமங்கலிகள் தங்கள் கணவருக்காக வழிபடும் விரத நாள். இந்த விரதம் நமது புண்ணிய பரத தேசம் எங்கும் பல்வேறு பெயர்களால் , சிற்சில மாற்றங்களுடன் கொண்டாடப் படுகிறது. 
 
"உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன்
ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்."
என சுமங்கலிகள் ஸ்ரீ தேவியிடம் இன்றைய தினத்திலே பிரார்த்தனை செய்கிறார்கள்.







 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக