வெள்ளி, 4 நவம்பர், 2011

கந்தன் கருணை # 2


காணுதற்கு நல்ல கயிலையில் 
ஈசனோடு உலக அன்னை
நல்ல பல யோசனைகள்
செய்யும் ஒரு காலை-
யாண்டும் மூவுலகமும் 
வேண்டும் படி செல்லும் 
மாமுனி நாரதர் - ஒரு
மாம்பழத்தோடு வந்தார்.(4 )

'இது காணுதற்கு அரிய கனி
  ஈசன் உண்ணுதற்குரிய  கனி  '
என அந்த கலக முனி
பழத்தை பரமனிடம்
பணிந்துத் தந்தார்.(5 )

ஒரு மாங்கனியைக்   கண்ட
இரு பிள்ளை கனிகள்
திரு முகங்கள் மலர 
அதை பங்கிட்டு தரும்படி கேட்டனர்.(6 )

இதுவே  தருணம் என  பிரம்ம முனியும்
கனியை  விள்ளாமல் கொள்ளுதலே முறை
என மெல்ல கலகம் தொடர்ந்தார். (7)

வெள்ளை பனி மலை வாழும் - அந்த
விடை ஏறும் வேந்தனும் மனதினில்
 விளையாடும் எண்ணம் கொண்டு
 "விநாயகா ! வேலவா !
 வேண்டும் இந்த கனி உமக்கு எனில்
 விரைவில்  இந்த உலகம் முழுதும்
 சுற்றி வருவீர் !
முதலில் வந்தவர் இதை
உங்களின் விருதாய்
உண்ண  விருந்தாய்  பெறுவீர்!"  என்றார். (8)

ஒரு தெய்வீக நாடகம்
 மெல்லத் துவங்கியது .
(தொடரும்.... ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக