செவ்வாய், 15 நவம்பர், 2011

விஷ்ணுபதி புண்ய கால தர்ப்பணம்

முன்னோர்களுக்கு செய்யப்படும் நீர்த்தார் கடனில் ஒன்றுதான் தர்ப்பணம். இதை பொதுவாக அம்மாவாசை அன்று பெரும்பாலானோர் செய்வது உண்டு.  முந்நாட்களில் நித்ய தர்ப்பண முறைகள் இருந்துள்ளன. காலத்தின் வேகத்தில் அவை எல்லாம் தற்போது மறைந்து விட்டன.

 'அம்மாவாசை' போன்றே விஷு புண்ய காலங்களான உத்தராயணம், தட்சிணாயணம் , மாத பிறப்பு , கிரகண காலங்கள் , மகாளய பட்சம்  போன்ற விசேஷ காலங்களில் தர்ப்பணம் செய்வது உண்டு. இதில் ஆடி அம்மாவசை மற்றும் மகாளய அம்மாவசை காலங்களில் தர்ப்பணம் செய்பவர்கள் அதிகம். 

அதே போன்று இந்த விஷ்ணுபத்தி புண்ய காலத்திலும் தர்ப்பணம் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கக் கூடியது. எனவே தர்ப்பணம் செய்யும் அன்பர்கள் இந்த விஷ்ணுபதி புண்ய காலத்திலே தர்ப்பணம் செய்து, ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அருளாசியப் பெறுவதோடு , முன்னோர்களின் ஆசியினையும் பெற்றுக் கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக