வெள்ளி, 20 ஜனவரி, 2012

சித்தர்கள் தரிசனம் # 3

                                            சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்



"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பத்தினது அடிகளைப்போன்றே சர்குர் அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.
அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி , மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில் , அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.




                                                           ஆலயத்தின் முகப்பு 



                                                      சுவாமிகளின் ஜீவ சமாதி



                  
                                                      சுவாமிகளின் சீடரின் சமாதி


                                                        சுவாமிகளின் ஜீவ சமாதி


 இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை , மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து ,புது வஸ்திரம் சாத்தி வழிபட்டால் , தொழில் செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது  எனக் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக