செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஒரு வேண்டுகோள் !


                                               


ஐயா திரு.சிவ.மாரியப்பன் அவர்களுக்கும் 

ஐயா திரு."ஆன்மிகக்கடல்" வீரமணி 
அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் !

தங்களது விரிவான ஆன்மிக பணி யாவரும் அறிந்ததே. போற்றுதலுக்குரிய தங்களின் பணி தமிழ் கூறும் நல் உலகம் எங்கும் பரவ வேண்டும்.

 நம் தமிழ் நல் உலகில் பழமையான , அரிய , சக்தி மிகுந்த ஆலயங்கள் எத்தனையோ உள்ளன.  அவற்றில் பல ஒரு பொழுது பூஜை கூட இல்லாமல் , அவ்வளவு ஏன், விளக்கிற்கு எண்ணெய் கூட இல்லாத நிலையில் உள்ளன.
தங்களது வலையிலேயே எத்தனையோ ஆலயங்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

அத்தகைய ஆலயங்களில் , அந்தந்த ஊர்களில் உள்ள ஆன்மிகக்கடல் அன்பர்களின்  துணையோடு , ஒரு நாள் முழுமைக்கும் "ஓம் சிவ சிவ ஓம் " நாம வேள்வியினை நடத்தி வைக்க வேண்டுகிறேன். இதனை வாரத்தின் முதல் நாளாம் ஞாயிறு அன்று செய்யலாம் .

இதனால் ....
தினசரி ஜபம் செய்வதில் தொய்வு ஏற்படும் அன்பர்களும் பயன்   அடைவார்கள் . அன்பர்களின் அனுபவங்களும் ஒருவருக்கொருவர் நேரடியாக பரிமாறிக்கொள்ளப் படும். ஆலயங்களும் மீண்டும் எழுச்சி அடையும். நமது ஜப வேள்வியும் நாடெங்கும் பரவும் .

நன்றிகள்


பக்தி யுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக