வியாழன், 16 பிப்ரவரி, 2012

கந்தன் கருணை # 4


விழி மூடி திறக்கும் முன்னே
வியனுலகம் முழுதும் 
சுற்றி விரைந்து வந்த
 வடிவேலன் ,
வென்றது தானே என
வெற்றி கனியதைக்  கேட்டான் .

கனியது தனக்கு இல்லை
எனக் கண்டதும்
தணல் என ஆனான்
கனலினில் பிறந்த கந்தன்

காரணம் என்ன என்று
முக்கண்ணனார் சொன்ன போதும்
"போதும் போதும் " என
முகத்தினை திருப்பிக் கொண்டான்

அக்கினி கொழுந்தின்
ஆவேசம் கண்ட அன்னை
அன்புடன் அணைக்க வந்தாள்  
அவனோ அடி பல நகர்ந்து நின்றான்

கணபதி " பழம் நீ கொள் " என்றான்
நாரதர் வேதத்தை நாதத்தில் சொன்னார்
சுரர்களும்  துதி பல செய்தார்
கணங்களும் சரணம் சொன்னனர்

அத்துணை சமரசமும்
அவன் கோபத்தை அதிகமூட்ட

அவன் திரு விழிகள் சிவந்தன
அதில் சிறு துளிகள் துளிர்த்தன
மூச்சுக் காற்றும் வேகமாய் சுழன்றது
அதனால் அவன் அக்கினி மேனி மேலும் சிவந்தது
இரு இதழ்களும் பல வார்த்தைக் கூற துடித்தன
ஆயின் அப்போதும் அவன் வாயினின்று
மோன போதமே வெடித்தது

ஞானத்தின்  வடிவு அவன்
அருட்பெரும் ஜோதியில் தொடக்கம் அவன் 
வேதத்தின் முடிவு அவன்
ஞான  பழமோ அவனுக்கு பெரிது ?
இந்த ஞாலத்தின்  வளமே அன்றோ பெரிது


பின் இந்த கோபம் தான் ஏனோ ?
 (தொடரும் ..)








 







  




 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக