ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ச பகவான்





முன்னம் ஒரு நாளில் நான்
முற்றாய் தனித்து விழித்திருந்தேன் .
என்  பிறவி பயன் தீர்க்கும் நல்ல
குருவிற்காய் பசித்து தவித்திருந்தேன்.
இவரோ அவரோ என பலரையும்
எண்ணி எண்ணி தவித்திருந்தேன்

என் நிலைக்கிறங்கி பெருங் கருணையால்
எனையும் ஏற்றருள் புரிந்தேரே !
புண்பட்டு நின்ற மனம் தன்னில்
தண் புனலாய் பாய்ந்து வந்தீரே !
புனிதம் புனிதம் என்றே தம்
தாமரை மலரடி போற்றி பணிகின்றேன் .

முன்னம் எத்தனை, பின்னம் எத்தனை
பிறவிகள் என அறிந்திலேன்
"அத்தனைக்கும் நான் பொறுப்பு" என
ஆறுதல் அளித்த குருநாதா!
புண்ணிய மூர்த்தியே ! சகல மத சாரமே!
சரணம் குருநாதா ! சரணம் குருநாதா !

 

   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக