சனி, 18 பிப்ரவரி, 2012

அருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள் சமாதி





அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலே இருந்து "மலையரசன் கோவில் " என அழைக்கப்படும் பெருமாள் கோவில் செல்லும் வழியிலே , இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை " கும்பகோணம் சுவாமிகள் " எனவும் அழைப்பார்களாம். வெட்ட வெளியிலே , சாலை ஓரத்திலே , நித்ய பூஜைகள் ஏதும் இன்றி , இந்த சமாதி அமைந்துள்ளது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.  குறிப்பிட்ட சமுதாயத்தினைச் சார்ந்தவர்கள்  பௌர்ணமி அன்று மட்டும் வந்து வழிபாடு செய்வதாகக் கூறுகிறார்கள். அருகில் உள்ளவர்கள் அவ்வபோது விளக்கு போடுவதாகவும் கூறுகிறார்கள். சமாதியினை சுற்றி உள்ள பகுதிகளையாவது தூய்மை படுத்தி வைக்கலாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக